Thursday, June 30, 2005

முதல் (II class) இரயில் பயணத்திற்கு தமிழில் வழிகாட்டி...

ஊக்கம்: முகமூடியின் இப்பதிவு மட்டுமே!!!

இது இந்தியாவை (சென்னையிலிருந்து கிளம்பும் இரயில்களை!) மனதில் வைத்து மட்டுமே எழுதப்பட்டது. இரயிலில் கரன்ஸி, பர்ஸ் மற்றும் உடைமைகளுக்கு நீங்களே பொறுப்பு ! (இரயிலின் படங்கள் வேண்டுபவர்கள் எனக்கு ஒரு வரி மின்னஞ்சல் அனுப்புங்கள்...)

முன்னேற்பாடு

* உங்கள் லக்கேஜின் எடை பற்றியெல்லாம் கவலை வேண்டாம் (உங்களால் அதை தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா என்பது தவிர !!!)
* நெடுந்தூர பயணம் என்றால், இரயிலில் சாப்பிட புளிசாதம், இட்லி, சப்பாத்தி என்று வகையாக (சீக்கிரம் ஊசிப் போகாத அயிட்டங்களாக!) சாப்பாடு கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வழியில் வரும் ரயில் நிலையங்களில் கிடைக்கும் உணவை உண்டால் வயிறு புடுங்கிக் கொள்ளலாம் !!!
* இரயில் டிக்கெட், போர்வை, சோப்பு, சீப்பு, செயின், பஞ்சு (காது ப்ராப்ளம் இருந்தால்!) வகையறாக்கள்
* தண்ணீர் --- குடிக்க வாங்கிக் கொள்ளலாம், ஆனால், நெடுந்தூர பயணம் என்றால், இரயிலில் ஏறிய அடுத்த நாள் கழிவரையில் தண்ணீர் வராது. எனவே ...... (பேப்பரே ஓகே என்றால் உங்கள் இஷ்டம் !!!)
* ஆட்டோக்காரருடன் மல்லு கட்ட வேண்டிய (மனித / லக்கேஜ் கட்டணம் ...) சூழ்நிலைக்கான சாத்தியம் அதிகம் இருப்பதால், இரயில் நிலையம் செல்ல சற்று முன்னதாகவே கிளம்பவும் !
* ரொம்ப தாமதமாக கிளம்பினாலும், ஆட்டோக்காரரிடம் இரயில் புறப்படும் நேரத்தைக் கூறி, ஒரு பத்து ரூபாய் எக்ஸ்டிரா தருவதாக கூறி விட்டால், எப்பாடு பட்டாவது உங்களை இரயில் புறப்படும் முன்பாக, நிலையத்தில் சேர்த்து விடுவார், ஆனால், சேரும்வரை அவர் ரோடு மேல் செய்யும் சாகசங்களைக் கண்டு, உங்களுக்கு நாக்கு வெளியே தள்ளி விடும் என்பது ஒரு சின்ன எச்சரிக்கை !!!
* இரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 3 நிமிடங்கள்(!) முன்பாக இரயில் நிலையத்தில் இருப்பது நலம் !!!


இரயில் நிலையத்தில்


* உங்கள் லக்கேஜ் அதிக எடை இருந்தால், இரயில்வே அலுவலர் கண்ணில் படாமல், போர்ட்டரை வைத்து இரண்டு டிரிப் அடித்து, இரயிலில் லக்கேஜை (இருக்கைகளுக்கு கீழே!) நைசாக ஏற்றி விடுங்கள். மாட்டினால், தண்டம் அழ வேண்டி வரும்.
* இரயில் நிலையத்தில் எஸ்கலேட்டரும் கிடையாது, தள்ளுவண்டியும் கிடைக்காது !(போர்ட்டர்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் அவை இருக்கும்!)
* பட்டாஸ் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது !!! TTE யிடம் மாட்டினால், டின் கட்டப்படுவது நிச்சயம் !!!
* தலைவலி மாத்திரை கைவசம் வைத்திருங்கள். ஏதாவது அறுவையான சகபயணி மாட்டினால் உபயோகமாக இருக்கும் !
* நிலையத்தில் ஜாலியாக தம் அடித்து விட்டு, வண்டி புறப்பட்டவுடன், ஓடிப்போய் (ஸ்டைலாக) ஏற முயற்சிக்காதீர்கள் ! வழுக்கி தண்டவாளத்தில் விழுந்தால், சிவலோக பதவி நிச்சயம் !!!
* சரக்கு அடித்து விட்டு இரயிலில் ஏறுங்கள். சரக்கோடு ஏறினால், இரயில்வே போலிஸிடம் மாட்டுவது நிச்சயம் !


இரயிலில்

* இரவு இரயில் என்றால், TTE வருவதற்கு முன்பே, உங்கள் பெர்த்தில் ஏறி தூங்காதீர்கள். அவர் உங்களை எழுப்பி உங்கள் டிக்கெட்டை எப்படியும் பரிசோதிப்பார். கொஞ்சம் கடுப்பும் அடிப்பார் !!!
* இரயிலில் ஏறியவுடன் லுங்கி அல்லது பெர்முடாஸ¤க்கு மாறி விட்டால், வீட்டில் தூங்குவது போலவே தூங்கலாம்.
* உங்கள் லக்கேஜை, நீங்கள் எடுத்துச் சென்ற செயினை (சங்கிலி) வைத்து, இருக்கையுடன் இணைத்து பூட்டி விடுங்கள். இல்லையேல், நிம்மதியாக உறங்க முடியாது.
* நல்ல ஷ¥க்கள் போட்டிருந்தால், அவற்றை பெர்த்தில் தலைக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள் !!! இல்லையேல், அவை லவட்டப்படும்.
* எதுவும் இலவசமாகக் கிடைக்காது ! ஆனால், சில நல்லவர்கள், பிஸ்கட் இலவசமாக தரக்கூடும். அதை வாங்கி சாப்பிட்டால், ஆசுபத்திரியில் தான் கண் முழிக்க நேரிடும் (தலை பாரத்தோடு!)
* வழியில் பழம் தவிர எதையும் வாங்கித் தின்னாதீர்கள். மேலே சொன்னபடி, வயிறு பிடுங்க வாய்ப்பு அதிகம் !
* ஓசிப் பத்திரிகைகள் சகபயணிகளிடம் கிடைக்கும். தாராளமாக வாங்கிப் படியுங்கள் !
* இரயிலில் இருக்கும் டுபாக்கூர் மின்விசிறியை ஓட வைக்க, உங்கள் சீப்பு உபயோகமாக இருக்கும். அது ஏற்படுத்தும் இரைச்சல் கண்டு பயப்படாதீர்கள் !
* கீழ் பெர்த்தில் ஜன்னலை திறந்து வைத்து படுத்திருந்தால், உங்கள் செயின், வாட்ச், ஆகியவற்றுக்கு உத்திரவாதம் கிடையாது.


இறங்குமிடம்

* நீங்கள் இறங்க வேண்டிய இரயில் நிலையம் எப்போது வரும் என்று TTE யிடமோ சகபயணியிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
* பின்னிரவில் தான் நீங்கள் இறங்குமிடம் வருமானால், உஷாராக பார்த்து இறங்கவும். இல்லையெனில், ஏதோ ஒரு ஊருக்கு சென்று பாயை பிராண்ட நேரிடும் !
* டிக்கெட்டை காணவில்லையெனில், கூட்டத்தோடு கூட்டமாக நைசாக நழுவி விடுங்கள். இல்லையெனில், டிராக்கை தாண்டி ஏதாவது குறுக்கு வழியில் வெளியே ஓடி விடுங்கள் !
* நிலையத்தின் வெளியே, மறுபடியும், ஏதோ ஓர் ஆட்டோக்காரருடன் தகராறு செய்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லுங்கள் !


இந்த இடத்தில் உங்கள் முதல் இரயில் பயணம் இனிதே நிறைவடைந்தது... வருக வருக...

* நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான இன்னொரு விஷயம் இருக்கிறது.... இரயில் நாற்றம் எல்லாம் போக குளித்த பிறகு, இந்த பதிவிற்கு மறக்காமல் ஒட்டு போடுங்கள்....

© பாலா

இதனை பகுதியாகவோ முழுதாகவோ பயன் படுத்த நினைப்போர் செய்ய வேண்டியது :

அ) உங்கள் பயன்பாட்டில் நன்றி என்று பாலா பதிவிற்கு இணைப்பு கொடுங்கள்
ஆ) இந்த பதிவிற்கு ஓட்டு போடுங்கள்.

மீறுபவர்களுக்கு இரயில் பிரயாணச் சூட்டினால் மலச்சிக்கல் வரக்கடவது...

டிஸ்க்ளெய்மர்: இந்த கட்டுரை ஒரு வழிகாட்டி(அல்லது கையேடு) மட்டுமே... இதனால் ஏற்படும் பண, மன உளைச்சல்களுக்கு நான் பொறுப்பல்ல.

16 மறுமொழிகள்:

Shankar said...

LOL! nice work...

பரி (Pari) said...

ரொம்ப தாமதமாக கிளம்பினாலும், ஆட்டோக்காரரிடம் இரயில் புறப்படும் நேரத்தைக் கூறி, ஒரு பத்து ரூபாய் எக்ஸ்டிரா தருவதாக கூறி விட்டால், எப்பாடு பட்டாவது உங்களை இரயில் புறப்படும் முன்பாக, நிலையத்தில் சேர்த்து விடுவார், ஆனால், சேரும்வரை அவர் ரோடு மேல் செய்யும் சாகசங்களைக் கண்டு, உங்களுக்கு நாக்கு வெளியே தள்ளி விடும் என்பது ஒரு சின்ன எச்சரிக்கை !!!

உங்கள் லக்கேஜ் அதிக எடை இருந்தால், இரயில்வே அலுவலர் கண்ணில் படாமல், போர்ட்டரை வைத்து இரண்டு டிரிப் அடித்து, இரயிலில் லக்கேஜை (இருக்கைகளுக்கு கீழே!) நைசாக ஏற்றி விடுங்கள். மாட்டினால், தண்டம் அழ வேண்டி வரும்.

டிக்கெட்டை காணவில்லையெனில், கூட்டத்தோடு கூட்டமாக நைசாக நழுவி விடுங்கள். இல்லையெனில், டிராக்கை தாண்டி ஏதாவது குறுக்கு வழியில் வெளியே ஓடி விடுங்கள் !
>>>>>
இதுக்கெல்லாம் அந்நியன் வருவான்.

காமெடியா எழுதுனதுக்கான எந்த அறிகுறியும் இல்லாததால ரொம்ப சீரியஸான பதிவு போல இருக்கு.

"சின்ன சின்ன" மேட்டர்தானே இதெல்லாம். பண்ணலாம். தப்பில்ல நடத்துங்க.

முகமூடி said...

நல்ல உபயோகமான பதிவு... ஆனால் இது இந்தியா முழுதும் செல்லும் ரயில் என்பதால் ஒரு விஷயத்தை விட்டு விட்டீர்கள்... வட இந்தியாவில் ரிசர்வ் பெர்த்தாக இருந்தாலும் நீங்கள் பாத்ரூம் சென்று திரும்பி வந்தால் ஒரு வயதான பெரிய உருவம் உங்கள் பர்த்தில் படுத்திருக்கும் (சொத்து வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றப்படும் முன் நெஞ்சு வலி போஸ் கொடுப்பார்களே அந்த மாதிரி ஒரு போஸில்) கால்மாட்டில் ஒருவர் சோகமே உருவாக உட்கார்ந்திருப்பார். அவர்களை எந்த்ரிக்க வைக்க படும் அவஸ்தைகள்...

அப்புறம் ஓசியில் வாங்கி படிக்கும்/படுக்கும் பேப்பரை திருப்பி கொடுக்க வேண்டுமா, வேண்டாமா?

neyvelivichu.blogspot.com said...

oh my god.. this bala and boston bala are two different guys.. sorry mate.. i did not realise that..

ok now back to the topic.. bala thanks for giving the mugamoodi link on the topic.. i had never seenthat blog..

yours is also a good blog..keep it up.

As pari said, its default in Delhi that if you are taking GT to chennai till mathura (around 12 AM) you cannot sleep as weekly commuters will sit in your seats and play cards.. if you ask your right like anniyan, kaise aadmi ho thum (enna aaluyya nee) nu thittuvaanga.

by the way, since i mixed up your identity, i did not invite you to answer my questions.. please feel free to answer them.
http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_112010340546883258.html

thanks and regards

vishy

please remove the ananymous login option. thanks

Boston Bala said...

>>* உங்கள் லக்கேஜ் அதிக எடை இருந்தால், இரயில்வே அலுவலர் கண்ணில் படாமல், போர்ட்டரை வைத்து இரண்டு டிரிப் அடித்து, இரயிலில் லக்கேஜை (இருக்கைகளுக்கு கீழே!) நைசாக ஏற்றி விடுங்கள். மாட்டினால், தண்டம் அழ வேண்டி வரும்.///

Been there; done that :>
Sema experience pola !

said...

//சரக்கு அடித்து விட்டு இரயிலில் ஏறுங்கள். சரக்கோடு ஏறினால், இரயில்வே போலிஸிடம் மாட்டுவது நிச்சயம் !//

ரெகுலரா சரக்கடிக்கிற ஒருத்தர் சொன்ன அட்வைஸ் "வாட்டரோட வோட்கா, கோக்ல விஸ்கி, ரெண்டும் கலந்தா ஒன்னுமே வெளிய தெரியாது"

வீ. எம் said...

// இட்லி, சப்பாத்தி என்று வகையாக (சீக்கிரம் ஊசிப் போகாத அயிட்டங்களாக!) //
பாலா ,
இல்லயே , நான் ஊசி எடுத்து இட்லி, சப்பாத்தி ல குத்தி பார்த்தேன் , நல்லா போகுதே.. அப்புறம் எப்படி இதை ஊசிப்போகத அயிட்டம்னு சொன்னீங்க??? ஹி ஹி ஹி

///உங்கள் லக்கேஜின் எடை பற்றியெல்லாம் கவலை வேண்டாம் (உங்களால் அதை தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா என்பது தவிர !!!)//
அதே போல தூக்கி மேலே வைக்கும் போது கை தவறி யார் தலையில் விழுந்தால் அவருக்கு பலமாக அடி படாதவரை எடை இருந்தால் நலம்

அப்புறம் பாலா,முக்கியமான ஒரு மேட்டரை விட்டுட்டீங்க.. ரொம்ப முக்கியம் , அதுவும் முதல்ல செய்ய வேண்டியது மிஸ் பன்னிட்டீங்களே!!
வீ எம்

மாயவரத்தான் said...

த்தோடா... நம்ம 'முதல் பஸ் பயணத்துக்கு வழிகாட்டி'(http://mayavarathaan.blogspot.com/2005/05/blog-post_19.html")யை விட இது நல்லாருக்கே!

enRenRum-anbudan.BALA said...

nanRi, VM & mayavarathaan !!!

//அப்புறம் பாலா,முக்கியமான ஒரு மேட்டரை விட்டுட்டீங்க.. ரொம்ப முக்கியம் , அதுவும் முதல்ல செய்ய வேண்டியது மிஸ் பன்னிட்டீங்களே!!
//
puriyalaiyE, appu !!!

வீ. எம் said...

சரி, பாலா ஒரு க்ளு தரேன்..

ரயில் நிலையம் போன ஒடனே.. நம்ம கோச் (coach) ரிசர்வேஷன் சார்ட்ல ஒன்னு பார்க்கனும் !
வீ எம்

enRenRum-anbudan.BALA said...

V.M,
//ரயில் நிலையம் போன ஒடனே.. நம்ம கோச் (coach) ரிசர்வேஷன் சார்ட்ல ஒன்னு பார்க்கனும் !
//

suththamA puriyalE, boss :-(

It is unfortunate that people like kuzali and LLDas are leaving Tamil blogs !!!

Voice on Wings said...

//ரயில் நிலையம் போன ஒடனே.. நம்ம கோச் (coach) ரிசர்வேஷன் சார்ட்ல ஒன்னு பார்க்கனும் !
வீ எம்
//

:) sariyAna joLLu party :)

வீ. எம் said...

அங்க பாருங்க voice on wings கண்டுபிடிச்சுட்டார்.. பாம்பின் கால் பாம்பறியும் னு இதை தான் சொல்லுவாங்களா??

// It is unfortunate that people like kuzali and LLDas are leaving Tamil blogs !!! //
Not leaving, taking a short break. but still it is unfortunate . hope they will come back soon

அப்புறம் பாலா , என் கடைசி பதிவுல உங்க கருத்து இல்லையே.. ? என் blog ku leave விட்டுடீங்களா?? :)

வீ எம்

enRenRum-anbudan.BALA said...

இள ரத்தங்கள் எல்லாம் சம்ம ஷார்ப்பா இருக்கீங்க :) நாம தான், கொஞ்சம் வெண்குழலா ஆயிட்டோ ம் :-(
VM, ஒங்க லேட்டஸ்ட் பதிவை இப்ப தான் பார்த்தேன் ! கமெண்ட் போட்டிருக்கிறேன் ! பாருங்க !
என்றென்றும் அன்புடன்
பாலா

said...

Good one. But the people who read this may not really would travel in train considering the advent of low cost airlines!!!!

said...

Good one. But the people who read this may not really would travel in train considering the advent of low cost airlines!!!!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails